உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

Published On 2022-12-27 14:42 IST   |   Update On 2022-12-27 14:42:00 IST
  • புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது
  • மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதியோர்உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 511 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர். இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்நா.கவிதப்பிரியா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பா.சரவணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Tags:    

Similar News