உள்ளூர் செய்திகள்
அறந்தாங்கி அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிளை கூட்டம்
- இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிளை கூட்டம்
- அறந்தாங்கி அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிளை கூட்டம்
அறந்தாங்கி,
அறந்தாங்கி பாலகிருஷ்ணாபுரம் பிள்ளையார்கோயில் அருகே நடைபெற்றக் கூட்டத்திற்கு கிளை துணை செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார்.
அப்போது பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் கடந்த ஒர் ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வரும் குடிநீர் தட்டுபாட்டை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், மாத்தூர் முதல் பாலகிருஷ்ணாபுரம் வரை உள்ள சாலையில் தெருவிளக்குகள் அமைத்து தர வேண்டும், மின்னமர்சான்குளம், பெரியகுளம் ஆகிய ஏரிகளில் பழுதடைந்த மடைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், கிளை நிர்வாகிகள் ரெத்தினசாமி, நீலகண்டன், ராஜேந்திரன், சக்திவேல், கார்த்திக், தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிளைக் கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.