உள்ளூர் செய்திகள்

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் கிராம சபை கூட்டங்கள்

Published On 2023-10-03 14:40 IST   |   Update On 2023-10-03 14:40:00 IST
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் கிராம சபை கூட்டங்கள்

கந்தர்வகோட்டை,

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது.தச்சங்குறிச்சி ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் தலைவர் ராணி அந்தோணி சாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்குகள் அமைத்தல், அரசு பள்ளிக்கு கழிவறை மற்றும் குளம் தூர்வார்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கிராம பொதுமக்கள் கோரிக்கையாக வைத்தனர்.கூட்டத்தில் கலந்து கொண்ட கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை பேசும் போது, வரும் ஆண்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தங்கள் ஊராட்சியும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்றும் கூறினார்.மேலும், அரசு அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் கார்த்திக், தி.மு.க. ஒன்றிய செயலாளர் தமிழ் அய்யா, அனைத்து துறை அதிகாரிகள், துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் ராமன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.அதேபோல் கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையிலும், பழைய கந்தர்வகோட்டை கிராம சபை கூட்டம் தலைவர் ராணி முருகேசன் தலைமையிலும், அண்டனூர் கிராம சபை கூட்டம் தலைவர் இளங்கோவன் தலைமையிலும், விராலிப்பட்டி கிராம சபை கூட்டம் தலைவர் ஆர். எஸ்.முத்துக்குமார் தலைமையிலும், கோமாபுரம் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் தலைவர் அன்பு தலைமையிலும்,காட்டு நாவல் கிராம சபை கூட்டம் தலைவர் ஆரஞ்சு பாப்பா குணசேகரன், தலைமையிலும் அரவம்பட்டி கிராம சபை கூட்டம் தலைவர் சிவரஞ்சனி சசிகுமார் தலைமையிலும் நடைபெற்றது.

Tags:    

Similar News