உள்ளூர் செய்திகள்

கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாத மீனவர்கள்

Published On 2023-09-17 09:17 GMT   |   Update On 2023-09-17 09:17 GMT
  • புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை
  • இரு மீன் பிடி இறங்கு தளங்களிலும் 550 விசைப்படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன

புதுக்கோட்டை,

வடமேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், கனமழையுடன் 65 கிலோ மீட்டருக்கும் மேல் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் ஆகிய 2 விசைப்படகு மீன்பிடி இறங்கு தளங்களில் இருந்து மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை, இதனால் இரு மீன் பிடி இறங்கு தளங்களிலும் 550 விசைப்படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.  

Tags:    

Similar News