உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி புள்ளிமான் சாவு

Published On 2022-07-13 07:33 GMT   |   Update On 2022-07-13 07:33 GMT
  • வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்தது
  • சாலையின் நடுவே இறந்து கிடந்தது

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செம்பூதி சாலையில் பொன்னமராவதியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 4 முதல் 5 வயது வரை மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் ஒன்று சம்பவ இடத்திலேயே பலியானது. சாலையின் நடுவே இறந்து கிடந்த புள்ளி மானை வனத்துறையினர் மீட்டு உடற்கூறு ஆய்விற்கு பின்னர் வனத்துறை பகுதியில் புதைத்தனர். சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சற்று கவனமாக வாகனத்தி ஓட்டி வன விலங்குகளை காக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர்.

Tags:    

Similar News