உள்ளூர் செய்திகள்

2.50 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Published On 2022-12-14 14:51 IST   |   Update On 2022-12-14 14:51:00 IST
  • 2.50 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர்
  • டிரைவர் தப்பி ஓடிவிட்டார்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் குடிமை பொருள் குற்றபுலனாய்வுதுறை அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை தாசில்தார் வரதராஜன் தலைமையிலான அதிகாரிகள் புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக லோடு ஆட்டோ வந்துள்ளது. இதனை ஆய்வு செய்ய மறித்த போது வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுனர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதனையடு த்து வாகனத்தில் இருந்த 2 ஆயிரத்து 38 கிலோ ரேஷன் அரிசியையும், வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து மாவட்ட குடிமைபொருள் குற்றப்புலனய்வு துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர். இதே போல் கே.புதுப்பட்டி பகுதியில் சின்னசாமி மகன் கைலாசம் என்பவர் 636 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த அரிசியையும் பறிமுதல் செய்த பறக்கும் படை தாசில்தார் வரதராஜ், புதுக்கோட்டை குடிமை பொருள் குற்றப்புலனாய்வு துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து கைலாசம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News