உள்ளூர் செய்திகள்
- 1750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன
- டிரைவரையும் கைது செய்தனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சூத்தியன்பட்டி அரசடிப்பட்டி வழியாக ரேஷன் அரிசி கடத்தி வருவதாக ேபாலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஆலங்குடி சிறப்பு உதவி இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் அப்பகுதியில் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டாடா ஏசி வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் 1750 கிலோ ரேசன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்து, வாகனத்தின் உரிமையாளரும், ஓட்டுநருமான மழையூர் முருங்கைக்கொல்லை கிராமத்தைசேர்ந்த ராமையா மகன் ராஜேந்திரன் (வயது 45) என்பவரை கைது செய்தனர். பின்னர் ரேசன் அரிசியை புதுக்கோட்டை குடிமைமை பொருட்கள் வழங்கல் குற்ற புலனாய்வு புதுக்கோட்டை அலுவலரிடம் ஆலங்குடி போலீசார் ஒப்படைத்தனர்.