உள்ளூர் செய்திகள்

421 பயனாளிகளுக்கு ரூ.1.20 கோடி நலத்திட்ட உதவிகள்

Published On 2023-09-14 06:16 GMT   |   Update On 2023-09-14 06:16 GMT
  • குளவாய்பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 421 பயனாளிகளுக்கு ரூ.1.20 கோடி நலத்திட்ட உதவிகள்
  • கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா வழங்கினார்

புதுக்கோட்டை 

புதுக்கோட்டை மாவ ட்டம் எஸ்.குளவாய்ப ட்டி யில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 421 பயனாளிகளுக்கு ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் பல்வே று அரசு நலத்திட்ட உதவி களை மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா வழங்கி னார்.

பின்னர் அவர் கூறும் போது,

தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் நோக்கத்தில் மாத ந்தோறும் ஒரு குக்கி ராமத்தை தேர்வு செய்து மக்கள் தொடர்பு முகாம் நடத்திட அறிவுறுத்தியு ள்ளார்கள்.

அதன்படி தமிழக அரசி ன் சார்பில் பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொ ள்ளப்பட்டுவரும் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மக்கள் தொடர்பு முகாமில் அரசின் திட்ட ங்களை விளக்கும் வகையில் கண்காட்சிகள் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் அனைவரும் பார்வையிட்டு, தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை அறிந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.

பொதுமக்கள் அனை வரும் அளிக்கும் மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உரிய நடவடி க்கைகள் மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன.

அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்ட ங்களின்கீழ் பயன்பெறு வதற்கு பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை மனுக்களை அளித்து பய ன்பெறலாம்.

இம்மனுக்களின் மீது துறை சார்ந்த அலுவலர்க ளால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை உறுதி செய்யும் வகையில் மாவட்டக்ஷ ஆட்சியரகத்தில் கண்கா ணிப்பு அலுவலர் நியமிக்க ப்பட்டு, பொதுமக்களின் கோரிக்கை மனுவின் நிலை குறித்து அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு வருகி றது.

எனவே பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற முகாம்கள் மூலமாக அரசின்

திட்டங்களை அறிந்து கொள்வ துடன், அவற்றின் மூலம் பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.

இந்த முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வருவாய் கோட்டா ட்சியர் (பொ) க.ஸ்ரீதர், தனித்துணை ஆட்சியர் செய்யது முகம்மது, திருவ ரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, வட்டாட்சியர் விஸ்வநாதன்இ உள்பட பலர் கலந்து ெ காண்டனர்.

Tags:    

Similar News