உள்ளூர் செய்திகள்

67 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.8.52 லட்சத்தில் உதவி உபகரணங்கள்

Published On 2022-12-23 13:09 IST   |   Update On 2022-12-23 13:09:00 IST
  • 67 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.8.52 லட்சத்தில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன
  • கலெக்டர் கவிதா ராமு, பயனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார்.

புதுக்கோட்டை :புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத்தி றனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்தி றனாளிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 15 பயனாளிகளுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள் மற்றும் மத்திய அரசின் அலிம்கோ நிறுவனத்தின் மூலமாக 52 பயனாளிகளுக்கு ரூ.7,02,000 மதிப்பில் நவீன செயற்கை கால், ஊன்றுகோல், கைதாங்கி, முழங்கைதாங்கி, காலிபர், கற்றல் உபகரணங்கள் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கைபேசி, சிறப்பு உபகரணங்கள் என மொத்தம் 67 பயனாளிகளுக்கு ரூ.8,52,000 மதிப்பீட்டில் உதவி உபகரணங்களை கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சரவணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், முடநீக்கியியல் வல்லுநர் ஜெகன் முருகன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News