உள்ளூர் செய்திகள்

அனுமதியின்றி பொதுக்கூட்டம்- அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மீது 5 பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு

Published On 2023-03-06 09:39 GMT   |   Update On 2023-03-06 09:39 GMT
  • பொதுக்கூட்டம் நடத்த போலீசாரிடம் ஏற்கனவே அனுமதி கேட்டு இருந்தனர்.
  • ஜாமீனில் வெளிவர முடியாத 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவொற்றியூர்:

தண்டையார்பேட்டை, சேனி அம்மன் கோவில் தெருவில் நேற்று இரவு ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இந்த பொதுக்கூட்டம் நடத்த போலீசாரிடம் ஏற்கனவே அனுமதி கேட்டு இருந்தனர். ஆனால் போலீசார் அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில் பொதுக் கூட்டத்தில் அனுமதி இல்லாமல் எல்.இ.டி. திரைகள் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பற்றி அவதூறாக ஒளி பரப்பியது உள்பட பல்வேறு புகார்கள் குறித்து தி.மு.க. வின் 42-வது வட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் தண்டையார் பேட்டை போலீசில் புகார் மனு அளித்தார்.

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வடக்கு, கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், ஆர். கே. நகர்பகுதி செயலாளர் சீனிவாச பாலாஜி, 42-வது வட்ட செயலாளர் எஸ். ஆர் அன்பு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News