உள்ளூர் செய்திகள்

கராத்தே போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

கராத்தே போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

Published On 2022-06-13 06:44 GMT   |   Update On 2022-06-13 06:44 GMT
  • கொடைக்கானலில் தேசிய அளவிலான கராத்தே ஓபன் போட்டிகள் நடைபெற்றது.
  • போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

திண்டுக்கல்:

கொடைக்கானலில் தேசிய அளவிலான கராத்தே ஓபன் போட்டிகள் நடைபெற்றது. தமிழகம், பாண்டிச்சேரி, பஞ்சாப், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.

போட்டியில் வெற்றிபெற்ற தமிழகத்தை சேர்ந்த வர்ஷினி, ஜூலியானாேஜான்ஸ், ஸ்ரீலயா, நாகபிரபா ஆகிய மாணவிகளுக்கு தலைமை பயிற்சியாளர் ராஜகோபால் பரிசு வழங்கி பாராட்டினர்.

நிகழ்ச்சியில் கோபிநாத், கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News