உள்ளூர் செய்திகள்

அதிக மதிப்பெண் பெற்ற மாணவி ஒருவருக்கு பரிசு வழங்கிய காட்சி.

சுரண்டை அருகே பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு

Published On 2022-07-01 09:06 GMT   |   Update On 2022-07-01 09:06 GMT
  • அரசு மற்றும் முஸ்லிம் பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தி.மு.க. சார்பில் பாராட்டு விழா நடந்தது.
  • விழாவில் பொதுமக்களும், ஆசிரியர்களும், மாணவ- மாணவிகளும் கலந்து கொண்டனர்.

சுரண்டை:

வீராணம் அரசு மற்றும் முஸ்லிம் பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தி.மு.க. சார்பில் பாராட்டு விழா நடந்தது.

ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலர் ஷேக் முகம்மது ஏற்பாட்டில் நடந்த விழாவிற்கு, மாவட்ட தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாபன் தலைமை தாங்கினார். ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன், வீராணம் பஞ்சாயத்து தலைவர் வீரபாண்டியன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் இருதாலய மருதப்ப பாண்டியன், ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பழனி நாடார் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி, ஒன்றிய குழு தலைவர் திவ்யா, அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஜர்னாஸ் ஜான், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மைதீன் நிஷா, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பாலசுந்தரம், ஆலங்குளம் வட்டார காங்கிரஸ் தலைவர் முஸ்தபா, கிளைக் கழகச் செயலாளர் பாலசுப்ரமணியன், வீரபுத்திரன், அப்துல் காதர், முஸ்தபா கமால், பாலமுருகன், சதாம் உசேன், அன்சார் அலி உட்பட ஏராளமான பொதுமக்களும், ஆசிரியர்களும், மாணவ- மாணவிகளும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News