தனியார் பள்ளி வேன் மின்கம்பத்தில் மோதி விபத்து
- ஓசூர் அருகே தனியார் பள்ளி வேன் மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
- குழந்தைகள் இல்லாத காரணத்தால் அசம்பாவிதம் தவிர்ப்பு
ஓசூரில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரி களின் மாணவ,மாண விகளை அழைத்து செல்ல பயன்படுத்தும் வேன் மற்றும் பேருந்துகள் போக்கு வரத்து விதிமு றைகளை மீறி அதிக வேகமாக செல்கின்றன.
இந்த நிலையில் ஓசூர் பாகலூர் ஹவுசிங் போர்டு பகுதியில் நேற்று தனியார் பள்ளி வேன் ஒன்று மின்கம்பத்தில் மோதியது. அதிர்ஷ்டவசமாக, அதில் மாணவர்கள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மின்கம்பம் மற்றும் வீட்டின் சுவர் மீது மோதி நின்ற இந்த பள்ளி வாகனத்தில், குழந்தைகள் இருந்திருந்தால் மின்சாரம் பாய்ந்து பெரும் அசம்பா விதம் ஏற்பட்டிருக்கும்.
பள்ளி வாகனங்களில் வேக கட்டுபாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவை அதிக வேகத்துடன் செல்கிறது. மாவட்ட கலெக்டர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் தனியார் பள்ளி வாக னங்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வ லர்களும், ,பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.