உள்ளூர் செய்திகள்
- எலக்ட்ரானிக் கம்பெனி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
- வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், நியூ டெம்பிள் லேண்ட் அட்கோ பகுதியை சேர்ந்த விஸ்வநாதா உடுப்பா மகன் ஸ்ரீஆதர்ஷ் (வயது 26).
இவர் உத்தனப்பள்ளியில் உள்ள தனியார் எலக்ட்ரானிக் கம்பெனி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ஒரு ஊழியரை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவருடைய காதலை அவர் ஏற்றுக் கொள்ளாததால் மனமுடைந்த ஸ்ரீ ஆதர்ஷ் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.