உள்ளூர் செய்திகள்
தியாகதுருகம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
- தியாகதுருகம் துணை மின் நிலையத்தில் நாளை 15- ந்தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் துணை மின் நிலையத்தில் நாளை 15- ந்தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தியாகதுருகம், பெரியமாம்பட்டு, சின்னமாம்பட்டு, தியாகை, எலவனாசூர்கோட்டை, ரிஷிவந்தியம், பாவந்தூர், நூரோலை, அய்யனார்பாளையம், பழையசிறுவங்கூர், சூளாங்குறிச்சி, மாடூர், மடம், பிரிதிவிமங்களம், வீரசோழபுரம், வீ.பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை திருக்கோவிலூர் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.