உள்ளூர் செய்திகள்

பிளஸ்-2 துணைத்தேர்வு 19-ந்தேதி தொடங்குகிறது

Published On 2023-05-09 09:44 GMT   |   Update On 2023-05-09 10:14 GMT
  • பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியானது.
  • பிளஸ்-1 துணைத்தேர்வுகள் வருகிற ஜூன் 27-ந்தேதி முதல் ஜூலை 5-ந்தேதி வரை நடைபெறும்.

சென்னை:

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியானது. 8 லட்சம் பேர் எழுதிய இத்தேர்வில் 94 சதவீத பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கான துணைத்தேர்வு வருகிற 19-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெறும். துணைத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதே போல பிளஸ்-1 துணைத்தேர்வுகள் வருகிற ஜூன் 27-ந்தேதி முதல் ஜூலை 5-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News