உள்ளூர் செய்திகள்

கிணற்றில் பிளஸ்-1 மாணவி பிணமாக மீட்பு

Published On 2023-03-20 09:48 GMT   |   Update On 2023-03-20 09:48 GMT
  • நேற்று கிணற்றில் சத்யா பிணமாக மிதந்தார்.
  • கிணற்றில் மிதந்த மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்துள்ள கொலகன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சிவா. இவரது மகள் சத்யா (வயது17). இவர் கம்பைநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு சத்யா தனது பாட்டியுடன் விவசாய கிணற்றில் உள்ள மின்மோட்டாரை ஆன் செய்து வீட்டிற்கு வந்துள்ளனர். பின்னர் மோட்டாரை அனைப்பதற்காக சத்யா மட்டும் சென்றார். பின்னர் அவர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

இதையடுத்து நேற்று கிணற்றில் சத்யா பிணமாக மிதந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து கம்பைநல்லூர் போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

கிணற்றில் மிதந்த மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News