உள்ளூர் செய்திகள்

மானூர் வட்டத்தில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் - 23-ந்தேதி நடக்கிறது

Published On 2022-11-19 09:31 GMT   |   Update On 2022-11-19 09:31 GMT
  • மனுநீதி நாள் முகாம் அடுத்த மாதம் 14-ந்தேதி நடைபெற உள்ளது
  • மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஆகியோர் கொண்ட குழுவினரால் மனுக்கள் பெறப்படும்.

நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மானூர் வட்டம் தடியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் அடுத்த மாதம் 14-ந்தேதி நடைபெற உள்ளது. எனவே அதற்கு முன்னோடியாக வருகிற 23-ந்தேதி தடியம்பட்டி ஊராட்சி மன்ற சமுதாய நலக்கூடத்தில் காலை 10 மணி முதல் 1 மணி வரை மனுக்கள் பெறப்பட உள்ளன. மேற்படி முகாமில் ஆர்.டி.ஓ., மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஆகியோர் கொண்ட குழுவினரால் மனுக்கள் பெறப்படும்.

முகாம் நிறைவுற்றவுடன் அன்று பிற்பகல் அக்கிராமத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், மேற்படி குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஆய்வு குழுவிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News