உள்ளூர் செய்திகள்
சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோவில் கைது
- சின்னசாமி 14 வயதுடைய சிறுமியை திருமணம் செய்தார்.
- மேலும் அந்த சிறுமி தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பசும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி ( வயது37). கொத்தனாரான இவர் 14 வயதுடைய சிறுமியை திருமணம் செய்தார்.
மேலும் அந்த சிறுமி தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார். இந்த திருமணத்திற்கு சின்ன சாமியின் தாயும், சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்துள்ளனர்.
இது குறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சின்னசாமி, அவரது தாய் மற்றும் சிறுமியின் தாய் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிந்து குழந்தை திருமண செய்த சின்னசாமியை கைது செய்தனர்.