உள்ளூர் செய்திகள்

சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோவில் கைது

Published On 2022-10-30 15:16 IST   |   Update On 2022-10-30 15:16:00 IST
  • சின்னசாமி 14 வயதுடைய சிறுமியை திருமணம் செய்தார்.
  • மேலும் அந்த சிறுமி தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார்.

பெரம்பலூர் :

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பசும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி ( வயது37). கொத்தனாரான இவர் 14 வயதுடைய சிறுமியை திருமணம் செய்தார்.

மேலும் அந்த சிறுமி தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார். இந்த திருமணத்திற்கு சின்ன சாமியின் தாயும், சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்துள்ளனர்.

இது குறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சின்னசாமி, அவரது தாய் மற்றும் சிறுமியின் தாய் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிந்து குழந்தை திருமண செய்த சின்னசாமியை கைது செய்தனர்.

Tags:    

Similar News