உள்ளூர் செய்திகள்

பெரம்பலூருக்கு ரெயில் சேவை

Published On 2023-07-21 07:00 GMT   |   Update On 2023-07-21 07:00 GMT
  • பெரம்பலூருக்கு ரெயில் சேவை தொடங்கப்படுகிறது
  • அரியலூர்- நாமக்கல் வழியாக நடைபெறுகிறது

பெரம்பலூர்:

பெரம்பலூர் வழியாக அரியலூர், நாமக்கல்லுக்கு ரயில் சேவை தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பெரம்பலூர் வழியாக ரயில் போக்குவரத்து திட்டம் தொடங்க வேண்டும் என பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர் பார்லிமெண்டில் பேசி ரயில்வே துறை அமைச்சருக்கு கோரிக்கை வைத்தார். இதனை ஏற்று பெரம்பலூர் வழியாக அரியலூர், நாமக்கல்லுக்கு ரயில் சேவை தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதை தொடர்ந்து 116.26 கி.மீ. தூரம் கொண்ட அரியலூர் - நாமக்கல் ரயில் வழித்தடத்திற்கான ஆய்வுப்பணி முடிந்தவுடன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கை தொடங்கும் என பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தருக்கு ரயில்வே அமைச்சகம் கடிதம் அனுப்பி யுள்ளது.

Tags:    

Similar News