உள்ளூர் செய்திகள்

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

Published On 2023-07-20 14:00 IST   |   Update On 2023-07-20 14:00:00 IST
  • பெரம்பலூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறுகிறது
  • 9-ம் தேதி நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, திருமா ந்துறை ஊராட்சிக்குட்பட்ட தி. கீரனூர் கிராமத்தில் வரும் 9ம்தேதி கலெக்டர் கற்பகம் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறுகிறது. முகாமினையொட்டி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே தி.கீரனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக தி.கீரனூர் விஏஒ அலுவலகத்தில் வருவாய் துறை அலுவலர்களிடம் முன்னதாகவே மனுக்களை அளித்து பயன் பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News