உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது

Published On 2022-06-18 15:24 IST   |   Update On 2022-06-18 15:24:00 IST
  • பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 40).
  • சரவணன் தனது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தார்.

பெரம்பலூர்:

பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவர் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

சரவணன் தனது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார், சரவணனை கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.3 ஆயிரத்து 360 பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News