உள்ளூர் செய்திகள்

இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் பஞ்சாயத்து ராஜ் விழிப்புணர்வு

Published On 2023-11-08 08:27 GMT   |   Update On 2023-11-08 08:27 GMT
  • கூட்டத்தில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
  • மாணவி சிவானி கிராமசபை கூட்டத்தின் செயலாளராக கலந்து கொண்டார்.

தென்காசி:

இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் பஞ்சாயத்து ராஜ் கிராம சபை விழிப்புணர்வு கூட்டம் பள்ளியின் வளாகத்தில் பாரம்பரிய முறையில் நடைபெற்றது. இதில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 8-ம் வகுப்பு மாணவன் தேவேஷ் விவசாயி போல பாரம்பரிய ஆடையினை அணிந்து வேளாண்மை தொழிலில் உள்ள பிரச்சினைகள், சுற்றுப் புறத்தினை தூய்மையாக வைத்திருக்கும் முறை குறித்து எடுத்துரைத்தான்.

6-ம் வகுப்பு மாணவி மிருதுளா ஜனனி கிராம பகுதியினை தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் வைப்பது பற்றி விளக்கி கூறினார். கிராம சபை கூட்டத்தின் தலைவராக மாணவி காளிபிரியா கலந்து கொண்டு வேளாண்மை தொழிலை திறம்பட செய்வதற்க்கான ஆலோசனைகளை வழங்கி, சுற்றுபுறத் தூய்மையின் முக்கியத்துவத்தினை எடுத்துரைத்தார். மாணவி சிவானி கிராமசபை கூட்டத்தின் செயலாளராக கலந்து கொண்டார். மேலும் சுற்று புறதூய்மையை பாதுகாக்கும் விதமாக மாணவ, மாணவிகள் குழுவாக இணைந்து பள்ளியின் வளாகத்தை தூய்மைபடுத்தினர்.

Tags:    

Similar News