உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே டிராக்டர் மோதி முதியவர் பலி

Published On 2022-11-17 12:17 IST   |   Update On 2022-11-17 12:17:00 IST
  • சங்கராபுரம் அருகே டிராக்டர் மோதி முதியவர் பலியானார்.
  • சங்கராபுரம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரம் அருகே சோழம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மாரி (75). இவர் தனது இருசக்கர வாகனத்தில் சோழம்பட்டில் இருந்து சங்கராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். சேமபாளையம் தனியார் பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் பின்புறம் மோதியது. இதில் கீழே விழுந்த மாரி டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் அழகாபுரத்தை சேர்ந்த சந்துரு என்பவர் மீது சங்கராபுரம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Tags:    

Similar News