உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.
ஆண்டிபட்டி அருகே போதை மறுவாழ்வு மையத்தில் முதியவர் திடீர் சாவு
- சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென மயங்கி கிடந்தார்
- பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்
ஆண்டிபட்டி:
திருப்பூரை சேர்ந்தவர் மைக்கேல்ராசு (வயது60). இவர் மதுபோதைக்கு அடிமையானதால் தேனி மாவட்டம் க.விலக்கு பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென மயங்கி கிடந்தார். இது குறித்து அவரது சகோதரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து மைக்கேல்ராசை தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ைமக்கேல்ராசு எற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.