உள்ளூர் செய்திகள்

அக்டோபர் 3-ந்தேதி கடைசிநாள்: கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்

Published On 2022-09-24 07:45 IST   |   Update On 2022-09-24 07:45:00 IST
  • 4 இளங்கலை கால்நடை மருத்துவ படிப்புகளில் 680 இடங்கள் உள்ளன.
  • 550 இடங்களுக்கு 14 ஆயிரம் விண்ணப்பங்கள் இதுவரையில் பெறப்பட்டுள்ளன.

சென்னை :

சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் நாட்டு கோழி கண்காட்சி நடைபெற்றது. இதில் சிறுவிடை, பெருவிடை, தனுவாஸ்-அசீல், நந்தனம் கலப்பினம், கடக்நாத், நிக்கோபாரி, கிளி மூக்கு வால் போன்ற நாட்டு கோழிகள் இடம் பெற்றன.

இந்த கண்காட்சியை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்வக்குமார் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் '4 இளங்கலை கால்நடை மருத்துவ படிப்புகளில் 680 இடங்கள் உள்ளன. இதில் இட ஒதுக்கீடு போக மீதமுள்ள 550 இடங்களுக்கு 14 ஆயிரம் விண்ணப்பங்கள் இதுவரையில் பெறப்பட்டுள்ளன. தற்போது மருத்துவ படிப்பை போன்று கால்நடை படிப்புக்கும் விண்ணப்பிக்க கடைசிநாள் அக்டோபர் 3-ந்தேதி என்று நீட்டிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.

கால்நடை மருத்துவ படிப்புக்கு கடந்த 12-ந்தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை மறுதினத்துடன் (26-ந்தேதி) முடிவடைய இருந்த நிலையில் தற்போது அது நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News