உள்ளூர் செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம்

Published On 2022-12-25 15:03 IST   |   Update On 2022-12-25 15:03:00 IST
  • எம்.ஜி.ஆர்.நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
  • மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் சார்பில் எம்.ஜி.ஆர்.நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி கிருஷ்ணகிரி 5 ரோடுரவுண்டானா அருகில் உள்ள கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். படத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோவிந்தராஜ் தலைமை தாங்கி, மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் மாவட்ட அவைத் தலைவர் ஸ்ரீராமுலு, பொருளாளர் வெங்கடேசப்பா, நகரசெயலாளர் செல்வம், பொதுக்குழு உறுப்பினர்கள் சகாதேவன், ராமு,நாகரத்தினம், ஒன்றிய செயலளர்கள் முனியப்பன், கோவிந்தராஜ், ஆறுமுகம்,பிரேம்குமார், வடிவேல், தாமோதரன், நாகராஜ், ஜெயலலிதா பேரவை நிர்வாகி ராதாகார்த்திக், மாவட்ட சார்பு அமைப்பு செயலாளர்கள், இளைஞர் அணி மணிகண்டன்,மாணவர் அணி மோகன், அண்ணா தொழிற்சங்க பாபு, கணேசன், சரவணன், பாக்கியராஜ்,ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News