உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

Published On 2022-10-11 10:30 GMT   |   Update On 2022-10-11 10:30 GMT
  • பயிற்சி வகுப்பு 3 நாட்கள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்த நிலையில் முதல் நாள் பயிற்சி வகுப்பு தொடங்கியது.
  • மாணவர்களின் கவரும் வகையில் கற்றல் கற்பித்தல் அமைய வேண்டும் என்ற நோக்கில், எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு தொடங்கியது.

நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட, அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 234 பேருக்கு, இரண்டாம் பருவ பாட திட்டத்தில், இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு 3 நாட்கள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்த நிலையில் முதல் நாள் பயிற்சி வகுப்பு தொடங்கியது.

இதில் தொடக்கக் கல்வி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் பள்ளி மாணவ மாணவர்களின் கல்விநிலை பாதித்து அதை சரிசெய்யும் வகையில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதனடிப்படையில் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் எளிதாகவும் இனிமையானதாக அமையும் வகையில், செய்முறையோடு, காட்சிப் பொருளாகக் கொண்டு, மாணவர்களின் மனதைக் கவரும் வகையில் கற்றல் கற்பித்தல் அமைய வேண்டும் என்ற நோக்கில், எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு தொடங்கியது.

பயிற்சி வகுப்பிற்கு நன்னிலம் வட்டார கல்வி அலுவலர் முருகபாஸ்கர், மணி ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் நடேஷ் துரை வரவேற்றார்.

ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். ஆசிரியர்கள் தன்னார்வத்தோடு பயிற்சியில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News