உள்ளூர் செய்திகள்

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு கணக்கு தொடங்க புதிய திட்டம்

Published On 2022-09-09 10:29 GMT   |   Update On 2022-09-09 10:29 GMT
  • மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக சேலம் கிழக்கு கூட்டத்தில் தபால்காரரும், தாத்தா பாட்டியும் என்ற தலைப்பில் பிரசாரம் மட்டும் போட்டி நடைபெற உள்ளது.
  • குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை சேமிக்க முடியும்.

சேலம்:

சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக சேலம் கிழக்கு கூட்டத்தில் தபால்காரரும், தாத்தா பாட்டியும் என்ற தலைப்பில் பிரசாரம் மட்டும் போட்டி நடைபெற உள்ளது.

அதன்படி அனைத்து தபால் பட்டுவாடா ஊழியர்களும், மூத்த குடி மக்களுக்கு உதவி செய்யும் விதமாக குறைந்த பட்சம் ஒரு மாதத்தில் ஒரு மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறப்பாக செயல்படும் கிழக்கு கோட்டத்தைச் சேர்ந்த தபால் பட்டுவாடா ஊழியர்களின் பணி திறனை பாராட்டும் வகையில் துணைக்கோட்டம் கோட்டம் மண்டல வாரியாக பரிசுகள் வழங்கப்படும்.

இந்த சேமிப்பு கணக்கினை 60 வயது பூர்த்தி அடைந்த முதியவர்கள் மற்றும் 50 வயது பூர்த்தி அடைந்த பாதுகாப்பு பணியாளர்கள், மேலும் 55 வயது பூர்த்தி அடைந்த விருப்ப ஓய்வு பெற்றவர்கள் தொடங்கலாம். குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை சேமிக்க முடியும். இதற்கு ஆண்டுக்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News