தருமபுரியில் சீமான் பேட்டியளித்த காட்சி.
நீட், ஜி.எஸ்.டி. கொண்டு வந்தவர்கள் காங்கிரஸ், தி.மு.க. ஊட்டச்சத்து கொடுத்து வளர்ப்பவர்கள் பா.ஜ.க.
- நீட், ஜி.எஸ்.டி கொண்டு வந்தவர்கள் காங்கிரஸ், திமுகவினர், அதனை ஊட்டச்சத்து கொடுத்து வளர்ப்பவ்ர்கள் பா.ஜ.கவினர் என்று சீமான் கூறினார்.
- பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தருமபுரி வந்தார்.
தருமபுரியில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை தந்தார். அப்போது நிருபர்களை சந்தித்து அவர் கூறியதாவது:-
நாம் தமிழர் கட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு எங்கள் மீது அதிக நம்பிக்கை எற்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. தேர்தல் மட்டும் தான் வந்து செல்கிறது. ஆனால் வளர்ச்சி இல்லை. அரசியல் என்பது சாதி, மதம், சாராயம், பணம், இலவசம், மானியம் தான். நாங்கள் இலவசம் வேண்டாம் என்கிறோம். கல்வியை மட்டும் இலவசமாக கொடுங்கள் என்று கேட்கிறோம்.
மாதம் 1000 ரூபாய் கொடுக்கிறீங்க. இதை எத்தனை மாதம் கொடுப் பார்கள். எங்கள் தாய்மார்கள் விவசாய நிலத்தில் வேலை செய்கிறார்கள் என்று மாதம் ரூ.5000 கூலி கொடுக்கிறாங்க. நீங்க கொடுக்கிற 1000, ஒரு நாளைக்கு 30 ரூபாய் என்று கணக்குபோட்டு கொடுக்கிறீர்கள். அரிசியில் கோலம் போட்டு, எறும்புகளுக்கு உணவை வைத்தோம். எங்களை அரிசிக்கு இன்று கையேந்த வைத்துவிட்டார்கள்.
சாதி, மாத போதை ஏறிட்டவனுக்கு, அவன் இறந்தாலும் அது போகாது. அற்ப உணர்ச்சிக்கு மனிதன், கடவுள் என்பதை வணங்குவதோடு வைக்க வேண்டும். வீதியில் இழுத்துவிடக் கூடாது. ஆனால் இதை பிரதமரே செய்கிறார். மதம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது. சாதி, மதம் எதுவும் அண்ட முடியாத பெரு நெருப்பாக, இன்றைய தலைமுறை உருவாகி வர வேண்டும்.
ஆளுநர் பதவியே தேவை இல்லை. 8 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இல்லாத உரிமை, நியமனம் செய்யப்பட்டவருக்கு என்ன உரிமை இருக்கு? காவிரி விவகாரத்தில், கர்நாட காவில் தமிழ் திரைப்படம் தடை என்று வட்டாள் நாகராஜ் சொல்கிறார். ஆனால், நாங்கள் நினைத்தால், எங்களாலும் தடை செய்ய முடியும். காவிரி பிரச்சினை வந்தால், மட்டும் விட்டால் வட்டாள் நாகராஜ் வருவார்.
பங்காரு அடிகளாருடன் நான் நெருக்கமாக இருந்தேன். எல்லோரும் கருவறைக்குள் வரலாம் என்ற புரட்சியை உருவாக்கியவர். நானே உள்ளே சென்று பூஜை செய்துள்ளேன். அவர் இறப்பை கேட்டு அதிர்ச்சி யடைந்தேன். பேரிழப்பு தான். பயணம் முடிந்து நேரில் செல்ல உள்ளேன். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களுக்கு வரலாற்று அடையாளங்கள் இல்லை. சுதந்திர போராட்டத்தில் பாடப்பட்ட தலைவர்களுக்கு தெரு பெயர்,
வ.உ.சி.க்கு வரலாறு இல்லை. ஆனால் வல்லபாய் படேலை படிக்கச் சொல்கிறீர்கள். நீட், ஜி.எஸ்.டி. கொண்டு வந்தவர்கள் காங்கிரஸ், அவர்களை ஆதரித்தவர்கள் தி.மு.க., அதை ஊட்டச்சத்து கொடுத்து வளர்ப்பவர்கள் பா.ஜ.க. நீட் தேர்வு எழுத செல்லும் மாணவிகளை, தோடு கழற்ற சொல்கிறார். காதில் உள்ள தோட்டில், பிட்டு இருக்கும் என்றால், வாக்கு எந்திரத்தில், ஏன் தவறு நடக்காது?
சி.ஏ.ஜி. அறிக்கையின் மீது மோடி பதில் பேச மாட்டார். ஆனால் மன்கீபாத் பெட்டிக்குள் மட்டும் அவர் பேசுவார். நாடாளுமன்றத்தில் யார் பேசினால் திரும்பி கூட பார்க்கமாட்டார்.ஈழத்தில் என்ன நடந்ததோ அதே தான் தற்போது பாலஸ்தீனத்தில் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.