உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதியது டிரைவர் கவலைக்கிடம்

Published On 2022-08-08 06:53 GMT   |   Update On 2022-08-08 06:53 GMT
  • விழுப்புரம் அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதியது டிரைவர் கவலைக்கிடமாக உள்ளார்.
  • இந்த விபத்தில் ஆம்னி பஸ் முன் பகுதி முழுவதும் சேதமானது.

விழுப்புரம்: 

சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அரிசிலோடு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது. அது விழுப்புரம் அய்யலூர் அகரம் மேம்பாலம் அருகே வந்தபோது லாரியின் பின்னால் சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி ஆம்னி பஸ் ஒன்று வந்தது. சுமார் 40 பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த இந்த பஸ்சை தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முனுசாமி என்பவர் ஓட்டி வந்தார். அப்போது ஆம்னி பஸ் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்புறம் வேகமாக மோதியது. இந்த விபத்தில் ஆம்னி பஸ் முன் பகுதி முழுவதும் சேதமானது.

இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலத்த படுகாயங்களுடன் கிடந்த டிரைவர் முனுசாமி மற்றும் காயமடைந்த 4 பயணிகளையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்தினால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. போலீசார் லாரி மற்றும் ஆம்னி பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக ஆம்னி பஸ்சில் இருந்த சகபயணிகள் எந்தவித காயம் இன்றி உயிர் தப்பினர். 

Tags:    

Similar News