உள்ளூர் செய்திகள்

மயிலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி

Published On 2022-08-16 07:56 GMT   |   Update On 2022-08-16 07:56 GMT
  • சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது.
  • விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்தும், இறந்த முதியவர் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்:

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை விளங்கம் பாடி அருகே விழுப்புரம் நோக்கி முதியவர் ஒருவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். துகுறித்து தகவல் அறிந்த மயிலம் போலீசார் முதியவரின் உடலை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்தும், இறந்த முதியவர் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News