உள்ளூர் செய்திகள்

மத்தூர் அருகேநிலத்தகராறில் மோதல்; 3 பேர் கைது

Published On 2023-02-07 15:25 IST   |   Update On 2023-02-07 15:25:00 IST
  • நிலம் சம்மந்தமாக மகன்கள் 3 பேருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
  • இது தொடர்பாக 3 பேரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள சுண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு ரமேஷ், உதயகுமார், சுபாஸ் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். கோவிந்தராஜ்க்கு சுமார் 7 அரை ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் சம்மந்தமாக மகன்கள் 3 பேருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக 3 பேரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.

இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து ரமேஷ், உதயகுமார், சுபாஸ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News