உள்ளூர் செய்திகள்
கெலமங்கலம் அருகே கல்லூரி மாணவியை கடத்திய வாலிபர் மீது போலீசில் புகார்
- தருமபுரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.
- வாலிபர் அந்த மாணவியை கடத்தி சென்றுவிட்டதாக மாணவியின் தந்தை புகார் செய்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகேயுள்ள கூத்தனப்பள்ளி பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் தருமபுரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.
இவர் கடந்த 3-ந்தேதி முதல் மாயமாகி விட்டார். பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வெங்கட்ராஜ் (வயது 30) என்ற வாலிபர் அந்த மாணவியை கடத்தி சென்றுவிட்டதாக மாணவியின் தந்தை கெலமங்கலம் போலீசில் புகார் செய்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.