உள்ளூர் செய்திகள்
காவேரிப்பட்டணம் அருகே பைக் மோதி தொழிலாளி பலி
- தேர்ப்பேட்டை என்ற பகுதியில் வந்த போது அந்த வழியாக வந்த பைக் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது.
- சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக மகேந்திரன் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
திருவண்ணாமலை மாவட்டம், திருவதிபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் நேற்று முன்தினம் காவேரிப்பட்டணம்-கிருஷ்ணகிரி சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது தேர்ப்பேட்டை என்ற பகுதியில் வந்த போது அந்த வழியாக வந்த பைக் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக மகேந்திரன் உயிரிழந்தார்.
இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.