உள்ளூர் செய்திகள்

கந்திகுப்பம் அருகே இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்து தொழிலாளி சாவு

Published On 2022-07-07 15:29 IST   |   Update On 2022-07-07 15:29:00 IST
  • நிலைதடுமாறி சாலையில் எதிர்பாராதவிதமாக ஆறுமுகம் தவறி விழுந்தார்.
  • இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகே பர்கூர் அடுத்துள்ள மஜித் கொல்லஅள்ளி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது45).

இவர் கடந்த 4-ந்தேதி அன்று இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது சின்னமுட்டுலு என்ற இடத்தில் வந்த போது நிலைதடுமாறி சாலையில் எதிர்பாராதவிதமாக ஆறுமுகம் தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News