உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சி அருகே தாய் கண்டித்ததால் மகள் தற்கொலை

Published On 2022-08-09 06:24 GMT   |   Update On 2022-08-09 06:24 GMT
  • கள்ளக்குறிச்சி அருகே தாய் கண்டித்ததால் மகள் தற்கொலை செய்துகொண்டார்.
  • தாய் செல்வி மகள் சரிவர வேலை செய்யவில்லை என்று கேட்டர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே குதிரைச்சந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன்மனைவி செல்வி (வயது36). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் பிரிந்து சென்று விட்டார். இதைப்போல மகனும் தந்தையுடன் சென்று விட்டார். இவருடைய மகள் தமிழரசி மட்டும் தாயுடன் வசித்து வந்தார். மேலும் தமிழரசி டிப்ளமோ நர்சிங் படித்து தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்தார். பின்னர் அந்த வேலையை விட்டு விட்டு பருத்தி வயலில் மொக்கு போடும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவரது தாய் செல்வி மகள் சரிவர வேலை செய்யவில்லை என்று கேட்டர். 

இதனால் மனமுடைந்த தமிழரசி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை தூக்கிகொண்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து செல்வி அளித்த புகாரின்பேரில் கச்சிராயபாளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News