உள்ளூர் செய்திகள்

கடத்தூர் அருகே கஞ்சா விற்றவர் கைது

Published On 2022-08-28 08:34 GMT   |   Update On 2022-08-28 08:34 GMT
  • கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
  • வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாப்பிரெட்டிப்பட்டி,

கடத்தூர் அருகே சூரன்கொட்டாய்பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 60).

இவர் அந்தப் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சின்னசாமியை விசாரணை செய்தபோது அவர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சின்னசாமியை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News