உள்ளூர் செய்திகள்
சூளகிரி அருகே சாலையோர மரத்தில் இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி பலி
- வாகனம் நிலைதடுமாறி சாலையோரம் உள்ள மரத்தின் மீது மோதியது.
- சிகிச்சை பலனின்றி கோவிந்தப்பா உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள சின்னபொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தப்பா (வயது 27). கூலி தொழிலாளி.
இவர் தனது இருசக்கர வாகனத்தில் பத்தன பள்ளியிலிருந்து சின்னபொத்தூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.டேம் சாலையில் அவர் சென்றபோது எதிர்பாராத விதமாக வாகனம் நிலைதடுமாறி சாலையோரம் உள்ள மரத்தின் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த கோவிந்தப்பாவை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தப்பா உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.