உள்ளூர் செய்திகள்
பென்னாகரம் அருகே சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வெல்டிங் தொழிலாளி பலி
- மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது.
- மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரியை அடுத்த பென்னாகரம் குண்டு பெருமாள் காலனி பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் செல்வபதி (வயது 31). வெல்டிங் தொழிலாளி.
நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் அதியமான் கோட்டை அருகேயுள்ள புறவடை ஜங்சன் பகுதியில் சென்றுள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட செல்வபதி படுகாயம் அடைந்தார்.அவரை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.