உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூர் பேட்டை முருகன் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

பரமத்திவேலூர் முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை

Published On 2023-09-21 14:56 IST   |   Update On 2023-09-21 14:56:00 IST
  • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம்
  • தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

பரமத்திவேலூர்

புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திரு மஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி ,கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவி யங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்க ளுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதி களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிச னம் செய்து அருள் பெற்றனர்.

அதேபோல் நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவி லில் உள்ள வள்ளி -தெய்வா னை சமேத சுப்பிரமணியர் கோவில், கபிலர்மலை பால சுப்பிர மணியசாமி கோவில், பரமத்தி அருகே உள்ள பிராந்தகத்தில் 34.5 அடி உயர முள்ள ஆறுமுகக்கட வுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவில் சுப்ர மணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன், அனிச்சம்பா ளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ர மணியர், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்ட வர், நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோவில் சுப்ரமணியர், நன்செய் இடை யாறு ராஜா சாமி, கோப்ப ணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன், பாலப்பட்டி கதிர்மலை கந்தசாமி மற்றும் கந்தம்பாளையம் அருண கிரிநாதர் மலையில் உள்ள வள்ளி,தெய்வான சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெரு மானுக்கு புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷே கமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

இதில் அந்தந்த பகுதி களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகன் பெருமான தரிசனம் செய்த னர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News