சோழசிராமணி காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு
- சோழசிராமணி காவிரி ஆற்றில் 150- க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.
- 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் போலீசார் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டது.
பரமத்திவேலூர்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், ஜேடர்பாளையம் மற்றும் சோழசிராமணி காவிரி ஆற்றில் 150- க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் அந்தந்தப் பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்து வழிபட்டனர். பூஜை செய்து வழிபட்ட விநாயகர் சிலைகளை 3- நாளாக காவிரி ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாமக்கல் மற்றும் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வேலூர், நன்செய் இடையாறு, குச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றில் வேலூர் போலீசாரின் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டது.
இதேபோல் சேலம், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஜேடர்பாளையம் மற்றும் சோழசிராமணி காவிரி ஆற்றில் ஜேடர்பாளையம் போலீசார் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டது.