உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஓட்டல்களில் சோதனை நடத்திய காட்சி,
- ஓட்டலில் சாப்பிட்ட சந்தைப் பேட்டை புதூரை சேர்ந்த 14 வயது மாணவி கலையரசி பரிதாபமாக இறந்தார்.
- 57 கிலோ காலாவதியான இறைச்சி பறிமுதல்
நாமக்கல்
நாமக்கல்லில் துரித உணவு தயாரிக்கும் ஓட்டலில் சாப்பிட்ட சந்தைப் பேட்டை புதூரை சேர்ந்த 14 வயது மாணவி கலையரசி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கலெக்டர் உமா உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் அருண் தலைமை யில் உணவு பாதுகாப்பு அலுவலர், துப்புரவு அலுவலர், சுகாதார ஆய்வாளர் அடங் கிய 10 குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள துரித உணவகங்கள், அவைச ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டு வருகின்றன.இந்தநிலையில் நேற்று முன்தினம் 2-வது நாளாக மாவட் டம் முழுவதும் உணவு பாது காப்புத்துறை அதிகாரிகள் 108 ஓட்டல்களில் நடத்திய சோத னையில் 58 கிலோ காலாவதி யான உணவு மற்றும் இறைச்சி பறிமுதல் செய்தும், 24 கடைக ளுக்கு அபராதம் விதித்தனர், 24 கடைகளுக்கு அபராதம் விதித்தும் நோட்டீஸ் அனுப்பிவைக்கப் பட்டு இருப்பதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று 3-வது நாளாக மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஓட்டல்களில் சோதனை நடத்தினர். மொத்த மாக 87 ஓட்டல் களில் நடந்த இந்த சோதனை யில் 57 கிலோ காலாவதியான உணவு மற்றும் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக் கப்பட்டதாகவும், 20 கடைகளுக்கு அபராதம் விதிக்கப் பட்டு, நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.