உள்ளூர் செய்திகள்

ஐ.டி.ஐ தொழிற் பயிற்சியில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

Published On 2023-09-22 15:00 IST   |   Update On 2023-09-22 15:00:00 IST
  • 2023-2024 ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கைக்கான கடைசி தேதி இம்மாதம் 30-ந் தேதி
  • மாணவ, மாணவிகளும், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு (ஐடிஐ) நேரடியாக விருப்பமான தொழிற்பிரிவுகளை தேர்ந்தெடுத்து சேர்க்கை பெறலாம்

நாமக்கல்

நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல்லில் உள்ள அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி நிலையங்களில் 2023-2024 ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கைக்கான கடைசி தேதி, 4.0 தொழிற் பிரிவுகளுக்கு இம்மாதம் 30-ந் தேதி வரையும், என்சிவிடி பிரிவுகளுக்கு 23-ந் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐ.டி.ஐ. தொழிற் பயிற்சி நிலை யங்க ளில்,கம்ப்யூட்டர் ஆபரேட்டர் புரோகிராமிங் அசிஸ்டன்ட் (என்சிவிடி) ஓராண்டு (பெண்கள் மட்டும்) 7 இடங்கள் காலியாக உள்ளன. தகவல் தொடர்பு தொழில் நுட்பம் மற்றும் கணினி பராமரிப்பு (என்சிவிடி) 2 ஆண்டு (பெண்கள் மட்டும்) 8 இடங்கள் காலியாக உள்ளன. கட்டிட பட வரைவாளர் (என்சிவிடி) 2 ஆண்டு, 5 இடங்கள் காலியாக உள்ளன.

கம்மியர் ஆட்டோ பாடிரிப்பேர் (என்சிவிடி) ஓராண்டு 19 இடங்கள் காலியாக உள்ளன. இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மேனுபாக்சரிங் டெக்னீசியன் (இண்டஸ்ட்ரி 4.0) ஓராண்டு 17 இடங்கள் காலியாக உள்ளன.நாமக்கல் மாவட்டத்தில் மேற்கண்ட பயிற்சியில் சேர விருப்பம் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளும், கீரம்பூரில் உள்ள, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு (ஐடிஐ) நேரடியாக சென்று விண்ணப்பித்து விருப்ப மான தொழிற்பிரி வுகளை தேர்ந்தெடுத்து சேர்க்கை பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News