உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூரில் திடீர் மழையால் வாகன ஓட்டிகள், வியாபாரிகள் பாதிப்பு

Published On 2023-09-26 15:09 IST   |   Update On 2023-09-26 15:09:00 IST
  • பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு திடீரென சாரல் மழை
  • தொடர்ந்து இரவு முழுவதும் மழை பெய்து கொண்டிருந்தது.

பரமத்தி வேலூர்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, பரமத்தி, நடந்தை, மணி யனூர், கந்தம்பா ளையம், பெருங்கு றிச்சி, குப்பிரிக்கா பாளையம், சுள்ளிப்பா ளையம், சோளசி ராமணி, ஜமீன்இளம்பள்ளி குரும்பல மகாதேவி, கொத்த மங்கலம், சிறுநல்லிகோவில், திடுமல், தி.கவுண்டம்பாளையம், பெரிய சோளிபாளையம், கபிலக்குறிச்சி, இருக்கூர், வடகரையாத்தூர், ஆனங்கூர், குன்னத்தூர், பிலிக்கல்பாளை யம், சேளூர், கொந்தளம், கோப்பணம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

அதனைத் தொடர்ந்து இடி மின்னலுடன் கூடிய மழை கனமழை பெய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து இரவு முழுவதும் மழை பெய்து கொண்டிருந்தது. இதன் காரணமாக தார் சாலை வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள், பொது மக்கள் நனைந்து கொண்டு அவதிப்பட்டு சென்றனர். அதேபோல் சாலை ஓரங்க ளில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள், பூக்கடைகள் பழக்க டைகள், பலகார கடைகள், துணிக்கடைகள், மண்பாண் டம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்காரர்கள் மழையின் காரணமாக வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப் பட்டனர்.தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில் பெய்து வரும் மழையின் காரணமாக வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள் ளது. கடும் வெயிலின் காரண மாக பயிர்கள் வாடிய நிலை யில் இருத்தது. பெய்து வரும் மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. 

Tags:    

Similar News