உள்ளூர் செய்திகள்

6 கால்களுடன் பிறந்த கன்றுகுட்டியை படத்தில் காணலாம்.

6 கால்களுடன் பிறந்த அதிசய கன்று குட்டி

Published On 2023-01-04 09:32 GMT   |   Update On 2023-01-04 09:32 GMT
  • சின்னமணி-தெய்வானை தம்பதியினர் தங்கள் வீட்டில் பசு மாடு வளர்த்து வருகின்றனர்.
  • கன்றுகுட்டிக்கு முன்கால் பகுதியின் மேல் பகுதியில் 2கால்கள் கூடுதலாக இருந்தது.

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள மேலக்கலங்கல் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சின்னமணி-தெய்வானை தம்பதியினர். விவசாயிகளான இவர்கள் வீட்டில் பசு மாடு வளர்த்து வருகின்றனர்.

சினையுடன் இருந்த பசு நேற்று இரவு பெண் கன்றுகுட்டியினை ஈன்றது. பிறந்த அந்த கன்றுகுட்டி மற்ற குட்டிகள் போல இல்லாமல் முன்கால் பகுதியின் மேல் பகுதியில் இரண்டு கால்கள் கூடுதலாக கொண்டு இருந்தது.

கூடுதலாக இரண்டு கால்கள் இருந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அதிசயத்துடன் கன்றுக்குட்டியை பார்த்து செல்கின்றனர். இது குறித்து கால்நடை மருத்துவர்கள் கூறுகையில் பிறவி குறைபாட்டால் இப்படி கூடுதல் கால்களுடன் கன்று பிறந்து உள்ளது. அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்றி சரி செய்யலாம் என்றனர்.

Tags:    

Similar News