உள்ளூர் செய்திகள்

(கோப்பு படம்)

தமிழகத்தில் நேற்று 12,28,993 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published On 2022-09-05 02:16 IST   |   Update On 2022-09-05 02:16:00 IST
  • முதல் தவணையாக 78,337 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
  • பூஸ்டர் தடுப்பூசி 8,59,628 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று 50,000 சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. இது தொடர்பாக மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மந்திரி மா.சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 


ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. இதுவரை நடைபெற்ற 34 மெகா கோவிட் தடுப்பூசி முகாம்களில் 5 கோடியே 10 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளார்கள்.

நேற்று நடைபெற்ற முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட12,28,993 பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 78,337 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 2,91,028 பயனாளிகளுக்கும் மற்றும் 8,59,628 பயனாளிகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டோரில் 96.39% முதல் தவணையாகவும் 90.61% இரண்டாம் தவணையாகவும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. நேற்று தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றதால் இன்று கொரோனா தடுப்பூசி பணிகள் நடைபெறாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News