உள்ளூர் செய்திகள்

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106 வது பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் பால் வழங்கிய போது எடுத்த படம்.

எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி 2000 குடும்பங்களுக்கு பால்- அன்னதானம்

Published On 2023-01-17 07:36 GMT   |   Update On 2023-01-17 07:36 GMT
  • 2 ஆயிரம் குடும்பங்களுக்கு பால் மற்றும் அன்னதானம் வழங்கி வருகிறார்.
  • நிர்வாகிகள் வெங்கிடு, ராகவன், சிவகுமார், சின்னத்தம்பி, உள்ளிட்ட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் : 

திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சு.குணசேகரன் ஆண்டுதோறும் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு பால் மற்றும் அன்னதானம் வழங்கி வருகிறார். அதேபோல் இந்த ஆண்டும் எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்த நாளையொட்டி திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட வாலிபாளையம், கே.பி.என். காலனி, பெரியார் காலனி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2000 குடும்பங்களுக்கு ஆயிரம் லிட்டர் பால், மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் கிளைச் செயலாளர் முத்து அவிநாசி அப்பன், நிர்வாகிகள் வெங்கிடு, ராகவன், சிவகுமார், சின்னத்தம்பி, உள்ளிட்ட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News