உள்ளூர் செய்திகள்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் உண்ணாவிரதம்

Published On 2023-11-25 08:42 GMT   |   Update On 2023-11-25 08:42 GMT
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கடலூரில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்:

முதுகலை ஆசிரியர்களின் ஊக்க ஊதியத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையை பின்பற்றிட வேண்டும். 2004- 2006 இடைப்பட்ட கல்வி ஆண்டுகளில் தொகுப்பூ தியத்தில் பணியேற்ற முதுகலை ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை கணக்கில் கொண்டு தேர்வு நிலை மற்றும் ஊதியம் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கடலூரில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் ஜோதி முத்து, சட்ட செயலாளர் பாலமுருகன், மகளிர் அணி செயலாளர் உஷா, கல்வி மாவட்ட தலைவர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் மணிவாசகன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் துணைத் தலைவர் ராமலிங்கம், துணைத்தலைவர் செல்வகணபதி, இணை செயலாளர் வேல்முருகன், விருத்தாசலம் கல்வி மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், தலைமை ஆசிரியர் கழகம் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் அறிவழகன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News