உள்ளூர் செய்திகள்

தென்கரை கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-02-27 07:08 GMT   |   Update On 2023-02-27 07:08 GMT
  • தென்கரை கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
  • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சோழவந்தான்

சோழவந்தான் அருகே உள்ள தென்கரை கிராம வைகைக்கரையில் அமைந்துள்ள ஆதிகாலத்து உச்சி மகாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி சமேத மூலநாதர் ேகாவில் நாகேசுவரசிவம், செந்தில் ஆகியோர் தலைமையில் யாகபூஜை நடந்தது. மேளதாளத்துடன் புனித நீர் குடங்கள் எடுத்து கோவிலை வலம் வந்தனர். மகா கும்பாபிஷேகம் நடைபெற்று சிறப்பு அர்ச்சனை, பூஜை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News